24 August 2010

துளி !





துளி ! 
நிகழ்காலத்தின் கடைசி துளி அமுதம் வரை வழிந்தோடும் வாழ்க்கையை அருந்திவிடுங்கள் ! என் நண்பர்களே !

அது ஒரு மழைக்காலம் ! அந்தி மயங்கிய காலம் ! கதிர் முயங்கிய நேரம்
நாற்றங்கால் விட்டு  நடுவயல் தேடும் நாற்றின் பருவம்......

தோரண வாயில்கள் தொடர்ந்து அணி வகுத்தது போல் ஆங்காங்கே 
ஆல மரங்களும் அரச மரங்களும் நாவல் மரங்களும் நன்னீர் தெளித்தன.
நீர்த்துளிகள் இலைகளின் இடுக்குகளிடையே வழிந்தோடி உடல் நனைத்தன.

தலையின் மீது விழும் துளி உடலையும் மனதையும் குளிரூட்டியது.
 மலையின் முகடு வழியே வரும் காற்று மனதுக்குள் சிலிர்ப்பேற்றியது.

புதிதாய் பூத்த பூவை போல் அழகனைத்தையும் அடக்கி வைத்து 
நாணப்பட்டன! நர்த்தனமிட்டன! அத்தனை இலைகளும் ஆர்ப்பரித்தன.

பறவைகள் பாடி அழைத்தன.குயில்கள் கூவி அழைத்தன.
எங்கு நோக்கினும் மயில்கள் வயல்வெளிகளில் தங்கு தடையின்றி ஆடின.
தேனீக்களும் வண்ணத்துப் பூச்சிகளும் தேனுறிஞ்சிய வேகத்தில் 
மலர்கள் வழிநெடுகிலும் மயங்கிக்கிடந்தன !

வானம் துளி தூவி, துயிலுணர்ந்த முகிலை துகிலுரித்தது !
தூறல் நின்றாலும் துளிகள் நிற்கவில்லை 

சொட்டுச்சொட்டாய் ....... சொட்டுச்சொட்டாய்......  

நவம்பர் 5 , 1986 

நீயும் நானும் நம் கல்லூரி வாசலில் அடியெடுத்து வைக்கும்போது 
யாயும் ஞாயும் யார் யார் போலோ தானே  வந்தோம்!

கல்லூர் தெரியாது கல்லூரி தெரியாது 
செல்லூர் தெரியாது செல்லாத ஊரும் தெரியாது 
நல்லது தெரியாது அல்லதும் தெரியாது 
எவ்வூரும் தெரியாது எவரும் தெரியாது 
ஒவ்வொருவரும் நடந்து வந்தோம் !

" நீங்க எந்த வூரு ? "    
" தூத்துக்குடி..... நீங்க ? "
" திருவண்ணாமலை .... தம்பி ! பெயர்  என்னப்பா  ? "
" முத்து.... " 
" உங்க பையன் பெயரென்ன ? "
" அரசு... "

நீயும் நானும் பேசிக்கொள்ளவில்லை ! பெயர் மட்டும் தான் சொன்னோம் !
நம் தந்தையர் பேசிகொண்டதை நான் கவனிக்கவில்லை 
நீ கவனித்தாயா தெரியவில்லை .

கூப்பிடும் தூரத்திலிருந்து மீண்டும் கூப்பிடு  தூர தூரத்தில் கை 
கூப்பி நின்றனர் நம் மூத்த சகோதர மாணவர்கள் 

ஒரு செயற்கை நீர்த்தடாகம். 
தடாக நடுவில் மூன்று கொக்குகள் 
நான்காவது பறக்க எத்தனிக்கும் கொக்கு. 
கொக்குகளின் பின்னே செயற்கை நீரூற்று  அங்கே.........
                                                                                            
                                                                                    - துளிகள் வழியும்..........








2 எழுதுக!:

chithramathan said...

many are joining college. of course all are enjoying college life. after completing their course they become more responsible. but the college life...which gave them more experience than knowledge which gave them more friends than good teachers, which taught them how to adjust will be there in their sweet memory. even though they cherish the memories very few people know how to frame it in words so that the memories become eternal.very less people know how to express it in a precious form so that even the forth coming generation enjoys the memory.

You are one in a billion who is very much talented to express the thoughts and make it more precious than it deserves.

its verynice. i enjoyed and awaiting for the next episode.

and i'm proud of my precious brother. - chithra

Subhadra said...

Wow... Anna we were so surprised to know that you started your own blog, and when we entered, its a beautiful poetic world here. Congratulations!!
what a command over thamizh language,
for us we had to go thro many versus twice or thrice to get the real nectar of such nice lines.
Keep rocking!!!