05 October 2010

துளி 6

உணவறை !

இளவெயில் 
இதமாய் தொட 
வளவயல் 
வனிதையர் நட 
வரப்போரம் வரிசையாய் 
எறும்புகளாய் ஏறினோம்!


மத்திய பண்ணை 
இருபக்கமும் 
பரந்து விரிந்த 
பாதாம் மரங்கள் !
குடை பிடித்தாற்போல் 
எங்களை 
குசலம் விசாரிக்கும் !

கோழிப்பண்ணை 
கடந்தால் வெண் பன்றி கூடம் !
பால் பண்ணை 
பக்கத்தில் கால்நடை மாடம் !

எதிரில் தான் 
பருவம் வளர்ந்த  
பழத்தோட்டம் !

மீறி நடந்தால் 
பருவம் மீறிய 
பூந்தோட்டம் !
உட்புகும் 
உள நோட்டம்! 
மரியகுழந்தை இல்லம் !

வரிசையாய் வாகை 
மரங்கள் !

வந்தனம் கூறும் 
வந்தினம் !
வண்டினம் தேடும்  
பூவினம் ! 
இலைமறை 
காயினம் !

ஜன்னலின் பின்னால் 
பூக்களின்   புகலிடம் !
பூவையர் உறைவிடம் !

தும்பை பூவின் 
தூர் பாகம் 
துளிகளால் நிறைந்தது !
சுவைத்தால் இனிக்கும் !

வழியோரம் 
தும்பை செடிகள்  
விழியோரம் 
பசுமை வார்க்கும் !

யாரும் யூகித்தறியாத 
நேரத்தில் இங்கு 
மதிய உணவு வேளை!

நண்பகல் 
பதினோரு மணிக்கு 
இழுக்கும் 
பகல் உணவு ஆளை !

புதிராக இருந்தது !
புதிதாக இருந்தது !

வள்ளுவர் இல்லம் 
வந்தோம் !


" சார் மெஸ் எங்கே ?" 

"பர்ஸ்ட் இயரா"
" ஆமா சார் "

" வா சாப்பிட போவோம் "

                                                                                   துளிகள் விழும்........