உணவறை !
இளவெயில்
இதமாய் தொட
வளவயல்
வனிதையர் நட
வரப்போரம் வரிசையாய்
எறும்புகளாய் ஏறினோம்!
மத்திய பண்ணை
இருபக்கமும்
பரந்து விரிந்த
பாதாம் மரங்கள் !
குடை பிடித்தாற்போல்
எங்களை
குசலம் விசாரிக்கும் !
கோழிப்பண்ணை
கடந்தால் வெண் பன்றி கூடம் !
பால் பண்ணை
பக்கத்தில் கால்நடை மாடம் !
எதிரில் தான்
பருவம் வளர்ந்த
பழத்தோட்டம் !
மீறி நடந்தால்
பருவம் மீறிய
பூந்தோட்டம் !
உட்புகும்
உள நோட்டம்!
மரியகுழந்தை இல்லம் !
வரிசையாய் வாகை
மரங்கள் !
வந்தனம் கூறும்
வந்தினம் !
வண்டினம் தேடும்
பூவினம் !
இலைமறை
காயினம் !
ஜன்னலின் பின்னால்
பூக்களின் புகலிடம் !
பூவையர் உறைவிடம் !
தும்பை பூவின்
தூர் பாகம்
துளிகளால் நிறைந்தது !
சுவைத்தால் இனிக்கும் !
வழியோரம்
தும்பை செடிகள்
விழியோரம்
பசுமை வார்க்கும் !
யாரும் யூகித்தறியாத
நேரத்தில் இங்கு
மதிய உணவு வேளை!
நண்பகல்
பதினோரு மணிக்கு
இழுக்கும்
பகல் உணவு ஆளை !
புதிராக இருந்தது !
புதிதாக இருந்தது !
வள்ளுவர் இல்லம்
வந்தோம் !
" சார் மெஸ் எங்கே ?"
"பர்ஸ்ட் இயரா"
" ஆமா சார் "
" வா சாப்பிட போவோம் "
துளிகள் விழும்........