25 December 2010

துளி 8

 சாம்ராஜ்ய சக்கரவர்த்தி ( நட்பு ) 
ஏழாம் அறிவன் !

நட்பென்றால் 
இதயக்கதவுக்குள்
சிறை வைப்பாய் !

தப்பென்றால் 
இமயமானாலும்
சிதற வைப்பாய் !

உன்னை
உரசிப்பார்த்தால் 
எரிய வைப்பாய் !

உணவுக்குள் 
இருப்பாய் 
சிறிய உப்பாய் ! 

கண்டிப் பானவன் ! நட்பின்
               கலைஞன் ! தவறி ழைத்தால்
தண்டிப் பானிவன் ! எவர்க்கும்
               தனயன் ! யாவர் நலனும்
ஒன்றிப் போனவன் ! கருத்தில்
                ஓங்கார மானவன் ! சினத்தில்
குன்றிப் போகா திவனின்
                 குறிக்கோள் ஒன்றாம் நட்பு!

யாரையும் இயக்குவான் ! நட்பாலே
                 எவரையும் மயக்குவான் ! நண்பர்கள்
கூரையாய் திகழ்ந்திடுவான் வான்போலே
                 குழந்தையாய் மகிழ்ந்திடுவான் ! காற்றினிலே
சீரிலாமல் எழுதிடுவான் ! எப்போதும்
                  சிந்திப்பது போன்றிருப்பான் ! சுருள்முடியை
சீரிலாமல் வாரிடுவான் ! சிரித்திருப்பான் !
                  சிநேகிதத்தின் ஏழாவ தறிவிவனே !


சுயம் அழித்து ஞயம் வளர்ப்பான் !
ஞயம் வளர்ந்தால் சுயம் என்பான் !
லயம் அறிவான் இலாவகம் அறிவான் !
பயம் வெல்வான் பாடம் சொல்வான்  !


நான்கு கால் முயல்களை மட்டுமே பிடிப்பான் !
(என் செய முடியும் ஒன் செய முடியாது )
ஆண் குயில் மட்டுமே பாடுமென்பான் !

துளிகளை நட்பால் பிரபஞ்சம் ஆக்குவான் !
வளியினும் வார்த்தையில் வேகம் காட்டுவான் !

பிடிவாதத்தில் யாரையும்  மிஞ்சுவான் !
அடிக்குரல் பாடல்களை என்றும் இரசிப்பான் !
( அந்தப்பக்கம் வாழ்ந்தவன் ரோமியோ )

அச்சோகன் வெல்வான் !
அச்சோகம் கொல்வான் !  
(அ சோகன் = சோகம் இல்லாதான் )

என்று சந்தித்தேன் இன்று நினைவு அறிவிலில்லை !
என்றும் சந்திக்கிறேன் ! இன்று தூரம் அதிகமில்லை ! எம் நண்ப !
துளி கொட்டும் ........
                                                                                
                  

21 December 2010

துளி 7

ஜித்து கடை!


ஜித்து @ இந்த்ரஜித் 

அழுக்ககற்று ! அகத்தினின்றும் !

முதலாமாண்டு துளிர்கள் எல்லாம்
"ராகிங்" என்ற இனிய கொடுமைக்குள்
மனசில்லாமல் மடல் வெட்டப்படுவார்களாம்.
கல்லூரிக்குள் புகுமுன்பே கதை கேட்டதுண்டு!

சேர்த்து வைத்த நல்ல செயல்களெல்லாம் ............

சேற்றுக்குள் விழுந்து செந்தாமரையாய் முளைப்பதுண்டு
சேற்றுக்குள் விழுந்த சிறு விலங்கினமாயும் எழுவதுண்டு !

நாறாயினும் கன்றாயினும் மனமிருந்தால் மணமிருக்கும் !
வேறாயினும் உறவாயினும் அன்பிருந்தால் பண்பிருக்கும் !

வள்ளுவர் இல்லம் விட்டு வலம் நடந்தோம் !
உள்ளுவன உரைக்காமல் ஊமையாய் ஊர்ந்தோம் !
நீச்சல் குளம் தாண்டி பாய்ச்சலாய் வந்தோம் !
நீச்சன் ஒருவன் நிறுத்தினான் ! நின்றோம் !

அருகிருந்த கடை முன்பு அழைத்துச் சென்றான் !
புற ஆளுமை இங்கு தான் புதுப்பிக்க பெறுகிறது !
அழுக்கேறிய எங்கள் ஆடைகளின் அழுக்கழித்து
முறுக்கேற்றி கொடுப்பதின் முதலிடம் ஜித்து கடை !

"ஜித்து ! தீப்பெட்டி கொடு "

வழக்கமாய் வினவினான் ! வேண்டாதன விளம்பினான் !
வழி மொழிந்தோம் ! வழி நடந்தோம் !
இழிசெயலென அறிந்தும் இதம் கொன்றான் !
பழியுரைத்தான் ! பண்பிலன் ! "புகை" யுரைத்தான் !

இயன்றவரை இருமினேன் ! எச்சில்துளி எகிறித்தெரித்தது!
முயன்றுரைத்தேன் ! "புகை என் பகை " என்றேன் !
ஒவ்வாமல் ஓங்கரித்தேன் ! ஒன்றுமறியாது விழித்தான் !
ஒவ்வாமை கண்டு ஓடச்சொன்னான் ஓடினோம் !

                                                                                      துளி வரும் .......