சாம்ராஜ்ய சக்கரவர்த்தி ( நட்பு )
ஏழாம் அறிவன் ! |
நட்பென்றால்
இதயக்கதவுக்குள்
சிறை வைப்பாய் !
தப்பென்றால்
இமயமானாலும்
சிதற வைப்பாய் !
உன்னை
உரசிப்பார்த்தால்
எரிய வைப்பாய் !
உணவுக்குள்
இருப்பாய்
சிறிய உப்பாய் !
கண்டிப் பானவன் ! நட்பின்
கலைஞன் ! தவறி ழைத்தால்
தண்டிப் பானிவன் ! எவர்க்கும்
தனயன் ! யாவர் நலனும்
ஒன்றிப் போனவன் ! கருத்தில்
ஓங்கார மானவன் ! சினத்தில்
குன்றிப் போகா திவனின்
குறிக்கோள் ஒன்றாம் நட்பு!
யாரையும் இயக்குவான் ! நட்பாலே
எவரையும் மயக்குவான் ! நண்பர்கள்
கூரையாய் திகழ்ந்திடுவான் வான்போலே
குழந்தையாய் மகிழ்ந்திடுவான் ! காற்றினிலே
சீரிலாமல் எழுதிடுவான் ! எப்போதும்
சிந்திப்பது போன்றிருப்பான் ! சுருள்முடியை
சீரிலாமல் வாரிடுவான் ! சிரித்திருப்பான் !
சிநேகிதத்தின் ஏழாவ தறிவிவனே !
சுயம் அழித்து ஞயம் வளர்ப்பான் !
ஞயம் வளர்ந்தால் சுயம் என்பான் !
லயம் அறிவான் இலாவகம் அறிவான் !
பயம் வெல்வான் பாடம் சொல்வான் !
நான்கு கால் முயல்களை மட்டுமே பிடிப்பான் !
(என் செய முடியும் ஒன் செய முடியாது )
ஆண் குயில் மட்டுமே பாடுமென்பான் !
துளிகளை நட்பால் பிரபஞ்சம் ஆக்குவான் !
வளியினும் வார்த்தையில் வேகம் காட்டுவான் !
பிடிவாதத்தில் யாரையும் மிஞ்சுவான் !
அடிக்குரல் பாடல்களை என்றும் இரசிப்பான் !
( அந்தப்பக்கம் வாழ்ந்தவன் ரோமியோ )
அச்சோகன் வெல்வான் !
அச்சோகம் கொல்வான் !
(அ சோகன் = சோகம் இல்லாதான் )
என்று சந்தித்தேன் இன்று நினைவு அறிவிலில்லை !
என்றும் சந்திக்கிறேன் ! இன்று தூரம் அதிகமில்லை ! எம் நண்ப !