18 September 2010

துளி 5

வகுப்பறை !
வாழ்க்கை நெறியை 
வரி கேளாமல் 
வாரி வாரி 
இயற்கை வழங்கும் !
இனியாவது இரசிப்போம்!

விடியாத காலையை 
விடியச் சொல்லி 
வேகமாக வந்தேன் 
வகுப்பறை தேடி!

இந்நேரம்  துளி
என் முகத்தில்!

வகுப்பு!
அறையில் இல்லை  
இயற்கை 
முறையில் இருந்தது!

வயல் வெளியில், 
வரப்போரம், 
வளர்ந்த மர நிழலில் 
பயிர்களின் உளவியல்
பற்றிய வகுப்பு!
உழவியல் வகுப்பு!
(ஆக்ரோநோமி கிளாஸ் )

வயல் வெளியில் 
வகுப்பறையா ?

வாய்க்கால் நீரின் 
சலசலப்பில் 
வாழ்க்கை பாடமா?

கிளிகளின் 
இனிய ஒலியில் 
இயற்கை கீதமா?

இவையெல்லாம் 
புதிதாகத்தான் இருந்தது! 
புதிராகத்தான் இருந்தது ! 
"மாட்டிகொண்டோமோ" 
மனது சலனப்பட்டது! 
சஞ்சலப்பட்டது!

புதியதோர் உலகம்
செய்வதற்காக
புழுதியில் புதையல்
தேடினோம்!

வரப்புகளில் வந்து
நடக்காத கமலங்கள்
வயலுக்குள் வழுக்கின!

ஓடி வந்து
உலகம் கலந்தேன்!

ஒரு விழி அசைத்து
ஓரவிழி பார்க்கும்
உழவியல் ஆசிரியர்
( யாரென்று நண்பர்கள்
அறிவார்கள் )
மிரட்ட
நினைத்து
விழி உருட்டும்
விகல்பர்!

மிரட்டிய தொனியில்
" ஒய்  லேட்?"
மிரளாது நின்றேன்!

பின்னால் சப்தம்
தன்னால் விழுந்தான்
நண்பன் செல்வன்!
பயமறியா கன்று
சுயமிழந்தது!

வகுப்பு முடிந்ததை
வணக்கத்தில்
முடித்தார்!
பிணக்கமின்றி
சுயமிழந்தவனை 
சுனை நீரில் துடைத்தோம் !

துளி வரும்........

7 எழுதுக!:

ரோஜா said...

நன்று :)

rmkgreat said...

நன்றி! ரோஜா

Anandh said...

Superb! Eagerly waiting for the next one.

Anandh

rmkgreat said...

நன்றி ஆனந்த் !

Subhadra said...

Its a joy to read.
This style of poetry was much easier for us to understand, little diluted senthamizh and short lines like hicoo!!

rmkgreat said...

நன்றி சுபத்ரா!

chithramathan said...

mikka nandru! aavaludan ethinokki irukkirom adutha thulikkaga.