ஆனந்தத் திருமுகன்!
துயர் கண்டு அயராதிரு! உயர்வாய்! உண்மை !
பகையிலான்! பைந்தமிழ் பாட்டுடையான்! சொந்தம்
வகையிலான்! வானுயர் சோகத்தினும் உள்ளம்
நகையுடையான்! நாவின் சுவையுடையான்! நண்பர்
தொகையுடையான்! வான்மனம் குணம் கொண்டான்!
அன்பன்! அன்பிலார்க்கும் நண்பன்! நல்லவன்!
நண்பகல் வரைநன்றாய் துயில்வதில் வல்லவன்!
அன்பில் அகன்றவன்! ஆனந்தத் திருமுகன்!
செண்பகச் சுகந்தன்! சுடரறிவின் செல்வன்!
இந்த சுந்தரன் பேகனின் மயிலாய் சுருண்டு கிடந்தான்.
யாரென்று தெரியாதவாறு முகம் மூடிக் கிடந்தான்.
நாடி வந்தோரை ஓடச் செய்யும் சூட்டில் காய்ந்தான்.
மூலைஒன்றில் முக்காடிட்டு மதிலில் சாய்ந்தான்.
"சாப்பிட்டீங்களா "
"ஹ்ம்"
"உடம்பு சரியில்லையா "
"ஹ்ஹ்ம்"
நண்பர்கள் தன்னைச் சுற்ற வைக்கும் இந்த பத்தாவது கோள்
இண்டம் தன்னை சுருக்குவதாய் போர்வைக்குள் சுருங்கியது.
நண்டதன் வளைக்குள் நுழைந்தாலும் இவனொரு எட்டாவது
கண்டம்! கணுவில்லா கன்னல்! நட்புக் காண்டம்! நளினன்!
பொதிந்து வைத்த பொட்டலமாய் கிடந்தவனை
அதிர்ந்தேதும் கூறாமல் அரைநிலவாய் முகம்பார்த்தோம்!
முதிர்ந்தவன் போல் முனங்கித் தீர்த்தான் முகத்தினின்றும்
உதிர்ந்த துளிதுடைக்க உளைச்சல் ஓடிவிட்டது !
அரசாள்பவன்!
பதட்டமில்லாப் பரிவிருக்கும்! பார்வையும் அமைதியுறும்!
அதட்டலில்லா குரலிருக்கும்! அன்பே நிறைந்திருக்கும்!
வதனத்தில் சோர்விருக்கும்! வையக அறிவிருக்கும்!
உருவத்தில் உயர்ந்திருப்பான்! உள்ளம் நிறைந்திருப்பான்!
கருவத்தில் சிறுத்திருப்பான்! காலம் பொறுத்திருப்பான்!
விருப்பத்தை விளம்பாதவன்! வீணாக விழிக்காதவன்!
சருப்பமே படைஎடுப்பினும் சடுதியில் பதராதவன்!
" அரசே ! நாம் மூவர்தான்
இந்த அறையின்
ஆக்கிரமிப்பாளர்களா ?"
" தெரியலைய்ங்க "
" சாப்பிட்டீங்களா "
" இல்லையிங்க "
உணர்வுகளை எல்லாம் உள்ளுக்குள் பூட்டி வைக்கும் உத்தி அறிந்தவன்.
உரியவர்களிடமும் சினம் கொள்ளத் தெரியாத சினம் கொல்லத்தெரிந்தவன்.
எங்களின் நாலாவது உலகம் இவன்! அணுகுண்டு அருகில் வெடித்தாலும் அசராதவன்!
ஆருயிர் தோழன்! ஆனந்தப் படுவதிலும் அளவோடிருப்பவன்! நட்பில் பிசகாதவன்!
துளி விழும்.........
4 எழுதுக!:
superrrrrr anna, ur description of ur roomates... and best friends.
நன்றி ப்ரீத்தி , சுபத்ரா & ஆனந்த்
asathu kanna asathu
உன் அறையின் மற்ற இரு சகோதரர்களையும் இவ்வளவு தத்ரூபமாக வார்த்தைகளில் வரைவிட்டாய் போ ....
excellent !
Post a Comment